கத்தரிக்காய் செடியில் தாறுமாறான அறுவடை எடுக்க பத்து டிப்ஸ்கள்!!
கத்திரிக்காய் செடியில் தாறுமாறான காய்கறிகளைப் பெற பக்காவான பத்து டிப்ஸ்கள்:
எனது மாடி தோட்டத்தில் நான் முதன்முதலாக வைத்த செடி கத்திரிக்காய் செடி தான். முதன்முதலாக தோல்வியடைந்த செடியும் கத்தரிக்காய் செடிதான். பொதுவாக கத்தரிக்காயில் நிறையவகையான பூச்சி தாக்குதல்கள் ஏற்படும். அதனை எல்லாம் சமாளித்து தாறுமாறான அறுவடை எடுப்பது என்பது மிகவும் கடினமான காரியம். அதுவும் ஆர்கானிக் விவசாயத்தில்.! ஆனால் நீங்கள் கத்திரிக்காய் செடியை வளர்த்து, ஓரளவு அறுவடையும் எடுத்துவிட்டால் உண்மையிலேயே, நீங்கள் சிறந்த இயற்கைவிவசாயிதான்.
ஒருவர் கத்திரிக்காய் செடியை வளர்த்து, அறுவடை எடுத்துவிட்டால், அவர்கள் மற்ற செடிகளை சுலபமாக வளர்த்துவிடலாம், என்று என்னுடைய தகப்பனார் அடிக்கடி கூறுவார்கள்.
![]() |
Brinjal Cultivation |
பருவம் பார்த்து பயிர்செய்:
- மாடித் தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டத்தில் வருடத்தின் அனைத்து மாதங்களும் கத்தரிக்காய் செடிகளை பயிரிடலாம். டிசம்பர் ஜனவரி முதல் மே மாதம் வரை!
- இருந்தாலும் ஆடிப்பட்டத்தில் தான் கத்தரிக்காய் செடிகள் அதிக காய்களை கொடுக்கிறது. எனவே கத்திரிக்காய் செடிகளை ஆடிப்பட்டத்தில் பயிரிடுவது சாலச்சிறந்தது.
- முடிந்தவரை கோடைகாலத்தில் கத்திரிக்காய் செடிகளை பயிரிடுவதை தவிர்ப்பது நல்லது. கோடைகாலத்தில் மாவுப் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.
- செடியில் கத்தரிக்காய்கள் சிறிய வடிவத்திலேயே வரும். ஏனென்றால் மழைக்காலத்தில் கத்தரிக்காய் செடிகளுக்குத் தேவையான ஊட்டசத்துக்கள் மழை நீரிலேயே இருக்கும். ஆனால் கோடைகாலத்தில் மழைநீர் கத்திரிக்காய் செடிகளுக்கு கிடைக்காமல் போவதால் கத்திரிக் காய்கள் சிறிய வடிவிலேயே காய்க்கின்றன.
- கோடைகாலத்தில் கத்தரிக்காய்கள் கசப்புத் தன்மை உடையதாக இருக்கும். இது பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் வருவதுதான். அதற்கு சாம்பல் அல்லது வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு கொடுப்பதினால் பொட்டாசியம் சத்து குறைபாடு நீங்கும்.
- முடிந்தவரை கோடை காலத்தை தவிர்த்து மீதி உள்ள காலங்களில் கத்திரிக்காய் செடிகளை பயிரிடுவது சிறந்தது.
விதை விதைத்தல்/விதைநேர்த்தி:
மண்கலவை தயாரித்தல்:
கத்தரிக்காய் செடிக்கு மண் கலவை என்று எடுத்துக்கொண்டால்,
- வண்டல்மண்,
- களிமண் கலந்த வண்டல் மண்,
- செம்மண் சிறந்தது.
முக்கியமாக சிறந்த வடிகால் வசதியுடைய மண்ணாக இருப்பது சிறப்பம்சம். மண் கலவையுடன் வேப்பம் புண்ணாக்கு, மற்றும் உயிர்-உரங்கள் அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா சூடோமோனஸ் டிரைக்கோடெர்மா விரிடி, பொட்டாஷ் பாக்டீரியா சேர்ப்பது மிகவும் அவசியம். இயற்கை உரங்கள் மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது இலை மக்கு உரம் அல்லது காய்கறி கழிவில் இருந்து கிடைக்கும் உரம் சேர்த்துக்கொள்ளலாம். மண் கலவையில் உயிர் உரங்களை சேர்ப்பதனால் கத்திரிக்காய் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எளிதாக கரைத்து கொடுக்கும். வேப்பம் புண்ணாக்கு கத்தரிக்காய் செடிகளுக்கு கொடுப்பதினால் வேர் அழுகல் நோய், வேரில் வரும் பூச்சிகள், தண்டு அழுகல் நோய், இலைகளில் வரும் இலைப்பேன்கள், செம்பேன்கள் கம்பளிப்புழு, பச்சை புழுக்கள் காய்த்துளைப்பான் தண்டுதுளைப்பான் இவைகளை கட்டுப்படுத்தலாம். கத்திரிக்காய் செடிகளை நாற்று விட்டு, ஜான் அளவுக்கு வளர்ந்த பின்னர், பிடுங்கி நட வேண்டும். தோராயமாக 25 நாள் முதல் 30 நாட்கள் வரை பிடிங்கி நடலாம்.
கத்திரிக்காய் செடியினை பாதிக்கும் பூச்சிகள்/புழுக்கள்:
- கத்தரிச்செடியில் முப்பது முதல் நாற்பது நாட்களில் பக்கக் கிளைகள் வரும்போது, தண்டு துளைப்பான், கம்பளி பூச்சி தொல்லைகள் இருக்கும். அப்பொழுது வேப்ப எண்ணெயுடன், இயற்கை சோப்பு கரைசல் கலந்து தெளிக்கவேண்டும். வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் தவறாமல் தெளித்து வருவது சிறந்த பலனை தரும்.
- அடுத்தது விளக்குப் பொறி (Pest Control) வைக்க வேண்டும். விளக்குப்பொறி வைப்பதினால் அந்த வெளிச்சத்தில் பூச்சிகள் கவர்ந்து இழுத்து விளக்குப்பொறி அடியில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் [எண்ணெய் கலந்த தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில்] விழுந்து, அதனால் பறக்க முடியாமல் இறந்துவிடும். முடிந்தவரை பாத்திரத்தில் விழுந்து கிடக்கும், பூச்சிகளை அடிக்கடி அகற்றி விடுவது நல்லது.
- கத்தரிக்காய் செடிகளில் வரும் தண்டுப்புழு, காய்த்துளைப்பான், தண்டுதுளைப்பான், தத்துப் பூச்சிகள் இவைகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி வைக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறி வைப்பதினால் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறியில் உள்ள பூச்சிகளை உடனுக்குடன் எடுத்து அழித்து விடுவது நல்லது.
- அசுஉனி, இலைப்பேன், மாவுப்பூச்சிகள் தொல்லைகள் இருக்கும். இதற்கு இஞ்சி, பூண்டு, மிளகாய், கரைசல் மிகவும் நல்லது. அசுஉனி பூச்சிகளுக்கு, சாம்பல் இலைகளின் மீது காலைவேளைகளில் தூவி விடலாம்., அல்லது சாம்பல் கரைசலையும் பயன்படுத்தலாம்.
உரங்கள்:
ALSO READ |
---|
👉 தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி? அதனை செடிகளுக்கு, எப்பொழுது எப்படி பயன்படுத்த வேண்டும்? 👉 வேப்பம் புண்ணாக்கு கரைசல் தயாரிப்பது எப்படி? |
கடலை புண்ணாக்கு / வேப்பம் புண்ணாக்கு கரைசல்:
- தழைச்சத்து-7.60
- மணிச்சத்து-1.50,
- சாம்பல்சத்து-1.30 விழுக்காடும்,
- தழைச்சத்தும்,-5.20 விழுக்காடு
- மணிச்சத்து-1.90 விழுக்காடும்,
- சாம்பல் சத்து-1.5 விழுக்காடும் உள்ளது.
கத்தரிக்காயில் அதிக காய்கள் காய்க்க வைப்பதற்கு இந்த சத்துக்கள் உதவுகிறது.
மழைக்கால பராமரிப்பு:
கத்திரிக்காய் கசப்புதன்மை நீங்க :
தொடர் பராமரிப்பு வேலைகள்:
கத்தரிச் செடி 6 மாதம் வரை நன்றாக காய்க்கும். அதற்கு பின்னர், (காய்த்து முடிந்தவுடன்), தேவையற்ற இலைகள் கிளைகளை அகற்றிவிட்டு திரும்பவும் தேமோர் கரைசல், கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல், செடிகளுக்கு கொடுத்துவந்தால், நன்கு விளைச்சல் எடுக்கலாம். கடலைப் புண்ணாக்கு கரைசல் கொடுக்கும் போது, கண்டிப்பாக வேப்பம் புண்ணாக்கும் சேர்த்து தான் கொடுக்க வேண்டும்., இல்லை என்றால் புழுக்கள், எறும்புகள் கண்டிப்பாக வரும். எனவே கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கும் கலந்த கரைசலில் நாம் செடிகளுக்கு கொடுக்க வேண்டும். இந்தக் கரைசலோடு தொழுஉரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறி கழிவு உரம் அல்லது இலை மக்கு உரம் இவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் கத்திரிக்காய் செடிகளுக்கு கொடுப்பதினால் கத்தரிக்காய் செடியிலிருந்து கத்தரிக்காயில் அதிக அளவில் அறுவடை செய்யலாம்.
3 Comments
informative, superb
ReplyDeleteநன்றி
Deleteகத்திரி அழுகல் நோய் எப்படி சரி செய்வது என்று குழப்பத்தில் இருந்தேன் மிக்க நன்றி அண்ணா உங்கள் பதிவிற்கு.
ReplyDelete