Which Plant is Good For Home
Lucky Plants |
துளசி:
முதலாவதாக நாம் பார்க்கப்போகும் செடி பெருமாளுக்கு உகந்த தெய்வீக துளசி செடி. துளசி செடி இல்லாத வீடு கோபுரம் இல்லாத கோவில் போன்றதாகும்.
விடியற்காலையில் பிரம்மமுகூர்த்தத்தில் துளசி செடியை சுற்றி வருவதால் தூய்மையான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. இதன் மூலமாக பல விதமான நோய்கள் குணமாகிறது. அதனால் தான் அதிகாலையில் நீராடி, பெண்கள் துளசி செடியை வழிபடும் வழக்கம் உருவானது. துளசி செடி வீட்டில் செழிப்பாக வளர்கிறது என்றால் அந்த வீட்டில் லட்சுமி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது ஐதீகம்.
துளசி செடி வாடி போனாலும், அல்லது காய்ந்து போனாலும் ஏதோ கெட்ட சகுனத்தின் அறிகுறியாகும்.
துளசி செடி வீட்டில், செழிப்பாக வளர்ந்திருந்தால், அந்த வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. துளசி செடியினை முறையாக பராமரித்து வணங்கி வந்தால், ஆரோக்கியத்தோடு, கடவுளின் அனுகிரகமும் கிடைக்கும். துளசி செடியை வீட்டின் முன்பக்கம், பால்கனி, வீட்டின் முற்றம், வீட்டின் பின்புறம் என எந்த பகுதியிலும் வளர்க்கலாம். நல்ல சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் வைக்க வேண்டும்.
துளசிசெடியை மாடிதோட்டத்தில் செழிப்பாக வளர்க்க 5- டிப்ஸ்கள்
செண்பக பூ செடி:
தொட்டாற் சுருங்கி:
Shame Plant [ Mimosa pudica ]
Lucky Plants |
இந்த செடியை வீட்டில் வளர்த்தால் பணவரவு அதிகரிக்கும் என்ற காரணத்தால் பலர் இதனை வீட்டில் ஏற்கனவே வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. விடியற்காலை நேரத்தில் தொட்டாச்சிணுங்கி இலைகளை நம் பத்து விரல்களால் தொடும் பொழுது, நமது காந்த ஆற்றல் அதிகரிக்குமாம்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் கிழக்கு கடற்கரை [ஈசிஆர்] சாலையில் உள்ள ஒரு நர்சரிக்கு, என் யூடியுபிற்காக வீடியோ ஒன்றினை எடுக்க சென்றிருந்தேன். அங்கு இந்த தொட்டாச்சிணுங்கி செடிகள் ஒரு வரிசை முழுவதுமே அதிகளவில் வைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய விலை கொண்ட தாவரங்கள் லட்சகணக்கில் அங்கு வியாபாரம் செய்யப்படுகின்றது. இந்த தொட்டசிணுங்கி செடிகளை பார்த்ததும் நான் கடைஓனரிடம் கேட்டேன். ஏன் இவ்வளவு செடிகள். விற்பனைக்கா? என்று. அவர் என்னிடம் கூறினார். என்ன சுதாகர் சார், இப்படி கேட்டு விட்டீர்கள். இப்பொழுதெல்லாம் இந்த செடியை அதிகம் பேர் வாங்கிச் செல்கின்றனர். செடி வந்ததும், காலி ஆகிவிடுகிறது. கேட்டு வாங்கிச் செல்கின்றனர் என்று. எனக்கு உண்மையிலேயே ஆச்சரியம் கலந்த வியப்பாய் இருந்தது. என்னடா, சாதாரணமாக கிராமங்களில், ரோட்டோரங்களில் வளர்ந்து கிடக்கும். இந்தசெடியா இங்கு விற்பனைக்கு போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள் என்று. ஆமாம் அதிர்ஷடமும், பணவரவும் தரும் செடி ஆயிற்றே!! நாமும் ஒன்று வாங்கிச் செல்வோம் என என் நண்பர் கூற, நாங்களும் தொட்டாச்சிணுங்கி செடியை வாங்கி வந்தோம். இன்று காலை கூட , அதனுடைய ஊதாநிற அழகிய பூக்களை ஒருநிமிடம் ரசித்துவிட்டு தான் பதிவை எழுத கணிணி முன் அமர்ந்தேன்.
முல்லைப்பூ செடி:
முல்லைபூ செடி குருவின் அம்சமாக சோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி" என்ற வரிகளால், இலக்கியங்களில் முல்லையின் மதிப்பையும், சிறப்பையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த முல்லை செடியினை வீட்டின் வடக்கு திசையில் வளர்ப்பது நல்லது. காடு போல வளர்க்காமல், தேவையில்லாத கிளைகளை கத்தரித்து பார்ப்பதற்கு அம்சமாக வளர்க்க வேண்டும். இதனால் குருவின் பார்வை கிட்டும். குருவின் பார்வை கிடைப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
செம்பருத்தி:
புதியதாக வீடு கட்டினாலோ அல்லது திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தாலோ செம்பருத்தி செடி ஒன்றினை நடுவார்களாம். மங்களகரமான நிகழ்வு தங்குதடை இன்றி, சிறப்பான முறையில் நடைபெறுவதற்காக இவ்வாறு நடப்படுவதாக கூறப்படுகிறது. செவ்வாய்தோஷம் இருப்பவர்கள் தங்கள் வீட்டுதோட்டத்தில் செம்பருத்தி செடியினை வளர்த்து வரும் போது, செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறைவதாக கூறப்படுகிறது.
நித்தியகல்யாணி:
Lucky Plants |
தற்போது ஏராளமான வீடுகளில் நித்தியக்கல்யாணி செடி விரும்பி வளர்க்கப்படுகிறது. இந்த செடியை வீட்டில் வளர்க்கும் பொழுது தூய்மையான காற்று நமக்கு கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் நித்திய கல்யாணி பூக்களிலிருந்து வீசும் மணமானது, காற்றோடு கலந்து, அந்த காற்றை நாம் சுவாசிப்பதால் பல நோய்கள் குணமடைகின்றன.
நீரின்றி அமையாது உலகு என்பதைப்போல பூவின்றி ஒருநாளும் இருக்காது நித்தியக்கல்யாணி என்பார்கள். இரவில் ஒரு பூ உதிர்ந்தால் கூட, அதற்கு ஈடாக மற்றொரு பூ காலைக்குள் பூத்து விடும். அதனால் தான் நித்தியமும் { தினமும்} பூத்துவிடும் கல்யாணி {மணப்பெண்} என பெயர் பெற்றது.
நூற்றுக்கும் மேலான மருத்துவ வேதிப்பொருட்களை உள்ளடக்கியது நித்தியமல்லி பூக்கள். நித்தியமல்லி பூக்களை கொதிக்க வைத்து, தேனோடு சேர்த்து தயாரிக்கப்படும் தேநீர் எவ்வித புற்றுநோயையும் குணபடுத்திவிடும். இதனை ஒவ்வொரு இல்லங்களிலும் வைத்திருந்தால் பெரும்பாலூம் மருத்துவமனையே நமக்கு தேவைபடாது.
வெற்றிலை:
விருட்ச சாஸ்திரப்படி வெற்றிலை ஆண் செடியாக கருதப்படுகிறது. அதனால் வெற்றிலை செடியை வீட்டில் தனியாக வளர்க்க கூடாது. அதனுடன் இரண்டு மூன்று செடிகளை வளர்க்க வேண்டும். குறைந்தது ஒரு செடியாவது வளர்க்க வேண்டும். வெற்றிலை கொடியை தனியாக வளர்த்தால் தம்பதியர் இடையே ஒற்றுமை குறைபாடு, புத்திர தோஷம் ஏற்படும். வெற்றிலை செடியை வீட்டின் பின்புறம் வளர்க்க வேண்டும்.
வல்லாரை :
மணிபிளாண்ட்:
இந்த செடியை வீட்டில் வளர்த்தால் பணவரவு அதிகரிக்கும் என்கின்ற நம்பிக்கையில், பலர் வீடுகளில் இந்த செடி தவறாமல் வளர்க்கப்படுகிறது. நமது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், குளிர்ச்சியை தரவும் மணிபிளாண்ட் பயன்படுகிறது. மணிபிளாண்டை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும். தென்கிழக்கு திசையில் தான் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக கிடைப்பதாகவும்,. இந்த திசையில் செடியை வைத்து வளர்ப்பதால் செடியும் செழிப்பாக வளர்ந்து, அதன் வேகமான வளர்ச்சியைப் போல, வீட்டில் பணபுழக்கமும் அதிகரிக்கும் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்து.. மணிபிளாண்ட் திசையை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் வைக்ககூடாது. ஏனெனில் இந்த திசை எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் திசை என்பதால் நம் வீட்டில் நஷ்டங்களும் வீண் விரயங்களும் அதிகரிக்கும்.
கற்றாழை:
கண்திருஷ்டி, வாஸ்து பிரச்சனைகள் தீர கற்றாழை வீட்டில் வளர்ப்பது சிறந்தது. வீட்டின் வாசலிலே கருப்பு கயிறு, படிகாரகற்கள், பாசிமணிகள் இவற்றோடு கற்றாழை கொத்தும், சேர்த்து கட்டப்படுவது நாம் அனைவரும் அறிந்தது தான். ஏனெனில் வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள், பலரின் ஏக்கப் பெருமூச்சுகள், கெட்ட ஆவிகள் இவற்றை எல்லாம் கற்றாழை தாவரம் தடுத்துவிடுகிறது. கற்றாழையை வீட்டின் முன்புறம் வளர்க்க வேண்டும். வீட்டின் உள்ளும், அழகு தாவரமாக வளர்க்கலாம். கற்றாழை காற்றை சுத்தபடுத்தி நல்ல தூய்மையான ஆக்ஸிசனை நமக்கு கொடுக்கிறது. வீட்டின் வாசலிலே கற்றாழை கட்டப்படுவது, காலம்காலமாக பெரியோர்களால் நம்பபட்டு வருகிறது. கற்றாழையை வடக்கு திசையில் வைத்து வளர்ப்பது மேலும் சிறந்த பலனைத் தரும்.
3 Comments
Aarumaiyana thagaval🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thanks anna
ReplyDelete👌👌👌💐💐💐
ReplyDeleteஒவ்வொரு வரியும் முத்துமுத்தாக உள்ளது. சிறிது நேரத்திற்கு இந்த கட்டுரையில் என்னையே மறந்துவிட்டேன். . மொத்தத்தில் சூப்பரான பதிவு.
ReplyDelete