Vallarai Keerai Medicinal uses
வல்லாரை கீரை/Centella Asiatica
வல்லாரை சுலபமாக வளர்க்க கூடிய தாவரம். வல்லாரை கீரையின் இலை தண்டுகள், பூக்கள் அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. வேர்கள் மற்றும் விதைகளிலிருந்தும் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வல்லாரையை மாடிதோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். வல்லாரைகீரை வளர்ப்பது மிகவும் சுலபமான காரியம். ஈரப்பதம் உள்ள இடங்களில் வல்லாரை தாறுமாறாக விளையும். சிறிய தண்டுகளை நட்டு வைத்தாலே போதும். அதுவாகவே படர்ந்து செழித்து வளர்ந்துவிடும். வல்லாரை வளர்ப்பு, உரங்கள், பூச்சிகள் கட்டுப்பாடு, பாராமரிப்பு முறைகளை பற்றி சென்ற பதிவில் விளக்கமாக கூறியிருந்தேன். அதனையும் நேரமிருந்தால் வாசியுங்கள்.
வல்லாரைகீரையின் மருத்துவப் பயன்கள்:
வல்லாரை கீரையில் இரும்புசத்து, சுண்ணாம்புசத்து, தாதுஉப்புக்கள் உயிர்சத்து, விட்டமின் A,C அதிகம் உள்ளது. மூளைவளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் உதவுகிறது. இது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மாத்திரைகள், பொடிகள், லேகியம் போன்ற வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டு, கடைகளில் சுலபமாக கிடைக்கிறது. வல்லாரைகீரை இலைகளை பற்களின் மீது தேய்ப்பதால், (காய வைத்து தயாரித்த வல்லாரை பொடியை கூட பயன்படுத்தி கொள்ளலாம்) மஞ்சள் கறை நீங்கி, பற்கள் மின்னும். பற்கள் ஈறுகள் வலுவடையும். வாய்புண் வாய்நாற்றம் நீங்க, வல்லாரைகீரை இலைகளை காலைவேளையில் மென்று தின்று வரலாம். படை போன்ற சருமநோய்கள் குணமாகும். முடி, தோல் நகம் நல்ல பொலிவினை பெறும். கீரை இலைகளுடன் கல்கண்டு, பசும்பால், குங்குமப்பூ அரைத்து 96-நாட்கள் சாப்பிட்டுவந்தால், முகம் பளப்படையும். இளமைத் திரும்பும். இவ்வாறு சாப்பிடும் காலங்களில் மாமிசத்தை தவிர்த்துவிடுதல் நல்லது. யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையின் இலைகளை அரைத்து பற்று போல போட்டு வந்தால், கால் வீக்கம், நோயின் தாக்கம் குறையும். தொழுநோய் போன்ற கொடிய நோய்களையும் குணப்படுத்துகிறது.
![]() |
vallarai keerai medicinal uses |
இரத்தசோகை- இரத்தில் ஹூமோகுளோபின் அளவினை அதிகரிக்கிறது. இரத்தசோகை நோயை குணப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. ஆஸ்துமா, சளி இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோர் வல்லாரை இலைகளை தேனீருடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். நல்ல பலனடைவீர்கள். பார்வைதிறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல் போக்கி, கண் நரம்புகளை பலமடைச்செய்து பார்வை கோளாறுகளை சரி செய்கிறது. காய்ச்சல் இருமல், சளி குணமடைகிறது. வல்லாரை இலையுடன் துளசி இலைகள், மிளகு சம அளவு எடுத்து, விழுதாக அரைத்து மாத்திரைகளாக சாப்பிட்டு வந்தால், காய்ச்சல் குணமாகிவிடுவதோடு அல்லாமல் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். உடற்சோர்வு தொண்டைக்கட்டு இதனையும் சரிசெய்கிறது. மலச்சிக்கலை போக்கி, வயிற்றுப்புண் குடல் புண்ணை ஆற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது. வல்லாரை கீரைபயன்படுத்தி எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். இதனால் உடல் சோர்வு, மனச்சோர்வு உடம்பு எரிச்சல், உடல் சூடு குறையும். சிறியவர்களுக்கு 10-வல்லாரை இலைகளை பச்சையாகவே சாப்பிட கொடுக்கலாம். மூளை நரம்புகள் பலம்பெறும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். காசநோய் உள்ளவர்களுக்கும் சிறந்த பலனை தருகிறது. வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து, இரவில் தூங்கப்போகும் முன், பாலில் கலந்து குடித்துவந்தால் வயிற்று பூச்சிகள் அழிந்துவிடும். வல்லாரை இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி வீக்கம், கட்டிகள் மேல் கட்டி வர, விரைவில் குணமடையலாம்.
வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே-பழமொழி
வல்லாரைகீரை சமையல்/Gotu kola Simple Recipes:
வல்லாரைகீரை கடையல்:
தேவையான பொருட்கள்:
- வல்லாரை இலைகள்- 1 கப் ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- பாசிபருப்பு-1/2 கப்
- வெங்காயம்-1 (சிறிய அளவு)
- தக்காளி-4
- பூண்டுபல்-4
- பச்சைமிளகாய்-1
- மஞ்சள்பொடி-சிட்டிகை அளவு
- பெருங்காய பொடி-1/4 ஸ்பூன்
தாளிக்க:
செய்முறை:
வல்லாரைகீரை தோசை:
தேவையான பொருட்கள்:
- வல்லாரைக் கீரை -1கப்
- பச்சை மிளகாய்- 4
- சீரகம்-1 ஸ்பூன்
- எண்ணெய் அல்லது பசு நெய்-தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- தோசைமாவு-1கப்
0 Comments