அம்மான் பச்சரிசி/Euphorbia Hirta/Asthma Plant
Amman Pacharisi |
அம்மான் பச்சரிசி :
வளர்ப்புமுறை:
அம்மான் பச்சரிசி செடியினை மாடி தோட்டம் அல்லது வீட்டுதோட்டத்தில் வளர்ப்பது மிகவும் சுலபமானது. வரப்பு, வாய்கால், கிணறுகள், சாலையோரங்கள் இத்தகைய இடங்களில் சாதரணமாக வளர்ந்து கிடக்கும். செடியினை பிடிங்கி வந்து, நட்டு வளர்க்கலாம். விதைகளிலும் வளர்க்கலாம். தண்டுகளை ஊன்றி வைத்தும் வளர்க்கலாம். ஈரப்பதமான இடங்களில் சுலபமாக வளரும். இப்பொழுது மழைகாலமாதலால் சுலபமாக சாலையோரங்களில் அம்மான் பச்சரிசி செடியினை காண முடியும். அதை பிடிங்கி வந்து தோட்டத்தில் வளருங்கள். குடும்பத்திற்கே பயன்தரக்கூடியது. அதிகம் பூச்சி தாக்குதலோ, நிறைய உரங்கள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. சாதாரண தோட்டத்துமண்ணிலே வளர்க்கலாம். கிளைகளை கத்தரித்துவிடுவதன் மூலம் அடர்ந்து படர்ந்து வளரும்.
மருத்துவ பயன்கள்:
- அம்மான் பச்சரிசி ஆங்கிலத்தில் ஆஸ்துமா ப்ளாண்ட் என்றழைப்படுகிறது. இந்த பெயரிலிருந்தே உங்களுக்கு தெரியும் ஆஸ்துமா தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மூச்சுவிடுவதில் சிரமம், சளி, இருமல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சைனஸ், தும்மல், மூக்கடைப்பு மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்க வல்லது பிறகு அம்மன் பச்சரிசி இலைகளையும் சேர்த்து சமைத்து சாப்பிட ஆஸ்துமா தொடர்பான பிரச்சினைகள் குணமடையும். இரத்தத்திலுள்ள கெட்ட அழுக்குகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. வேப்பிலை இலைகளுடன் மிளகு அம்மன் பச்சரிசி இலைகள் மூன்றையும் அரைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. பலவீன உடலுக்கு உடல் வலிமையை தருகிறது. நீண்டநாளாக ஆறாத காயங்களை குணமாக்கவல்லது. கை கால்களில் வீக்கம் உள்ள இடங்களில் இலைகளை அரைத்து பற்றுப் போட்டு வந்தால் ஐந்து நாளில் வீக்கங்களும் வலியும் குறைந்து குணமடையலாம். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க கூடியது.
- அம்மான் பச்சரிசி தண்டுகளை உடைக்கும் பொழுது வருகின்ற பாலில், அதிகளவு கால்சியம், அஸ்ட்ரிஜண்ட், டோனிக் போன்றவை காணப்படுகிறது. வயிற்றுபுண், வாய்புண், தோல் நோய்களுக்கு மருத்தாகிறது. அம்மான் பச்சரிசியின் பாலை முகத்தில் கருமையான இடங்களில் தடவி, காய்ந்ததும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி வந்தால், இழந்த பொலிவை திரும்பவும் பெற முடியும்.
- குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்க, அம்மான் பச்சரிசி பூக்களை சேகரித்து சுத்தம் செய்து பசும்பால் சேர்த்து அம்மியில் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வரும்பொழுது தாய்ப்பால் அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாக அம்மான் பச்சரிசியின் இலைகளை சேகரித்து மோருடன் சேர்த்து அம்மியில் அரைத்து காலையில் ஏழு நாட்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
- குடல் புழுக்களை அழிக்கும் உடலின் உள்ளுறுப்புகளில் உள்ள காயங்களை ஆற்றும். காசநோயை கூட குணப்படுத்தும் என்று மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வயிறு பொருமல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளால் தொடர்ந்து அவதிபடுபவர்களுக்கு அம்மான் பச்சரிசி வரப்பிரசாதமாகும். வெங்காயம் பூண்டு இவற்றோடு அம்மான் பச்சரிசி இலைகளை சேர்த்து சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து குணமடையலாம்
- அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் பாசிப்பருப்புடன் அம்மான் பச்சரிசி கீரையை சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் அல்சரில் இருந்து முழுமையான குணம் அடையலாம்.
- தாய்மை அடையாத பெண்களுக்கு அம்மான் பச்சரிசி இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் கர்ப்பப்பையும் பலப்பட்டு விரைவில் தாய்மை அடைவார்கள். ஆரோக்கியம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது. ஆண்மை குறைவை குணமாக்கிடவும், விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆண்மலட்டுதன்மையை குணமாக்கும் மருந்தாக பயன்படுகின்றது. சிவப்பு நிற அம்மான் பச்சரிசி பொடியை தினமும் எடுத்து வந்தால் விந்தணுக்களை அதிகரிக்கும். அம்மான் பச்சரிசி இலைகளுடன் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து பசும்பாலில் அரைத்து தொடர்ந்து மூன்றுவாரங்கள் எடுத்துக் கொண்டால் தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனை குணமடையும்.
- காலில் ஏற்படும் ஆணி, பாத எரிச்சல் பாத வெடிப்பு போன்றவற்றிற்க்கு அம்மான் பச்சரிசி தண்டுகளை உடைத்தால் கிடைக்கும் பாலினை, பாதத்தில் தடவி வந்தால் குணம் அடையலாம்.
![]() |
Amman Pacharisi |
அம்மான் பச்சரிசி அழகு குறிப்புக்கள்:
பேஸ்பேக்:
அம்மான் பச்சரிசி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும். இலைகளை தண்ணீரில் சுத்தம் செய்து இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். முகத்தை தண்ணீரால் கழுவிய பின்னர் தண்ணீரை துண்டினால் ஒற்றி எடுத்துவிட்டு, அரைத்த பேஸ்ட்டை முகத்தில் பூசி உலர விட வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், எண்ணை பசை சருமம் இவையெல்லாம் மாறி, முகம் நல்லநிறம் பெறும். சிலருக்கு கை கால்கள் நல்ல நிறமாகவும் முகம் மட்டும் கருப்பாகவும் காணப்படும். இந்த கருமையை நீக்குவதற்கும் பயன்படுகிறது. வெயிலால் ஏற்படும் கருமை நீக்குகிறது. இதனை ஒரு சன்ஸ்கிரீன் லோஷன் என்றுகூட குறிப்பிடலாம். முகத்தில் எந்த மாசும் மருவும் இல்லாமல் முகம் நல்ல ஷைனிங்காக பளபளப்பாக மழமழவென்று இருக்கும். வாரமிருமுறை அம்மான் பச்சரிசி பேஸ்பேக்கை பயன்படுத்தலாம்.
அம்மான் பச்சரிசி துவையல்:
தேவையான பொருட்கள்:
- கருப்பு உளுந்து- 1/2 கப்
- அம்மான் பச்சரிசி இலைகள்- 1கப்
- வரமிளகாய்- 2
- தேங்காய் பத்தைகள்- 2
- இஞ்சி- சிறிய துண்டு
- பூண்டு- 2 பல்
- புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு- தேவையானளவு
தாளிக்க:
- கடலை எண்ணெய்- ஒரு குழிகரண்டி
- கடுகு- 1/2 ஸ்பூன்
- சீரகம்-1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- ஒரு கொத்து
செய்முறை:
காந்தல் விரணமலக்கட்டுமே, கந்தடிப்பு சேர்ந்த தின விவைகள் தேகம் விட்டு போர்ந்தொன்றாய் ஓடுமம்மான் பச்சரிக் குன்மை இனத்துடனே கூடுமம்மா ணொத்த கண்ணாய் கூறு,
அகத்திய அடிகளாரின் குணவாகடப்பாடல். இதன்மூலம் அம்மான் பச்சரிசியின் பயன்பாட்டை அறிந்து கொள்ளலாம். அனைத்து நோய்களுக்குமே தமிழ் பாரம்பரிய மருத்துவத்தில் மருந்துகள் உள்ளது. கொரனா நோய்க்கு சீனர்கள் தங்களுடைய பாரம்பரிய மருத்துவத்தை தான் பயன்படுத்தி நோயின் தாக்கத்திலிருந்து மீண்டுவருவதாக கூறுகிறார்கள். நாமும் நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தையும், மூலிகைகளையும் மறந்து போய்விடக் கூடாது. போற்றி பாதுகாப்பது நம்முடைய கடமை. நன்றி!
1 Comments
Excellent Article. You are a great genius. தமிழ் வார்த்தைகளை அழகாக கையாளுகிறீர்கள். இது கட்டுரை போல் இல்லை.கவிதையை போல இருக்கிறது. அம்மான் பச்சரிசி மூலிகையை பற்றி இவ்வளவு விளக்கமாக இதுவரை நான் எங்குமே படித்ததில்லை. உங்கள் மொழிநடை மிகவும் ரசிக்க வைக்கிறது.உங்கள் வெப்சைட்டை சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்.நன்றி.
ReplyDelete