Translate

Sword Beans Health Benefits

தம்பட்டை அவரை


Sudagarkrishnanchannels
Sword Beans Health benefits 


வாள் அவரை,பேய் அவரை Sword Beans 


     தம்பட்டை அவரை அதிக ஊட்டசத்துக்களை கொண்ட உணவுகாய்கறியாகும். 24% புரதச்சத்தை கொண்டுள்ளது. தம்பட்டை அவரையின் காய்கள் ஒரு சிறு இனிப்பு சுவையோடு கூடிய அதிக சதைப்பகுதியை கொண்ட இறைச்சியின் சுவையை ஒத்திருக்கின்றது. தம்பட்டைஅவரை லெகுமினோசே { Leguminosae family }குடும்பத்தைச் சேர்ந்தது, இது ஆசிய கண்டத்தில் தோன்றியதாக நம்பப்படுகிறது. தற்பொழுது ஆசியா, ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டலப் பகுதிகள் முழுவதும் பயிரிடப்படுகின்றன. எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ பயன்களையும் கொண்டிருப்பதால், வெளிநாடுகளில் தேநீர், ஆரோக்கியபானங்கள் { supplements } தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பற்பசை, சோப்பு தயாரிக்கவும் கூட பயன்படுத்துகிறார்கள். தம்பட்டை அவரை, புரத உணவுகள் {energy boosters}தயாரிப்பதற்கும் சிறந்த மூலப்பொருளாக திகழ்கிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய ரகமான, தம்பட்டை அவரையின் வளர்ப்பு பற்றியும், மருத்துவ குணங்கள் பற்றியும், விதைகளை எங்கு பெறலாம் என்பதைப் பற்றியும், விரிவான தகவல்களை இந்த பதிவில் நீங்கள் காணலாம்.

தம்பட்டை அவரைப் பற்றிய அறிமுகம்:


    தம்பட்டை அவரை - அவரைக் குடும்பத்தைச் சார்ந்தது. ஆனால் அவரையைவிட அதிக நீளமாக பிரமிப்போடு வளரக்கூடிய ரகமாகும். அவரையில் செடி அவரை, கொடி அவரை இருப்பதுபோல, தம்பட்டை அவரையிலும் செடிதம்பட்டை, கொடிதம்பட்டை, என்று இரண்டு வகைகள் உண்டு. விதைகளை வைத்தே தம்பட்டை அவரையின் இனம் பிரிக்கப்படுகிறது. சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் விதைகள் காணப்படுகிறது.
தம்பட்டை அவரை நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய ரகமான காய்கறி வகைகளில், ஒன்றாகும். அதிக வறட்சியையும் தாங்கி வளரக் கூடியது. வருடம் முழுவதும் காய்த்து பலன் தரக்கூடியது. 


தம்பட்டை அவரை வளர்ப்பு:


   தம்பட்டை அவரை எல்லாவித காலநிலையிலும் சுலபமாக வளரக்கூடிய தாவரமாகும். என்னுடைய அனுபவத்தில் தைப் பட்டத்தில் தம்பட்டை அவரை விதைத்தால் நல்ல அறுவடையை சுலபமாக எடுக்கலாம். வெயில் காலங்களை தவிர்த்து மற்ற எல்லா மாதங்களிலும் தம்பட்டை அவரையை பயிர் செய்யலாம்.

மண் கலவை:


         தம்பட்டை அவரை, அனைத்து வகையான மண்(நிலங்)களிலும் சாதாரணமாகவே வளரக்கூடிய தாவரமாகும். முக்கியமாக மணல் கலந்த வண்டல் மண், செம்மண் போன்ற மண்களில் பயிரிட்டால் அதிக அறுவடையை எடுக்கலாம். நிலத்தில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. 


                                     மண்கலவை

 தேவையானபொருட்கள்     

அளவுகள்

1. செம்மண்/தோட்டத்து மண்

2. மணல் /தேங்காய்நார்

3. தொழுஉரம்/மண்புழுஉரம்
காய்கறிகழிவு உரம்

4. வேப்பம்புண்ணாக்கு

5. உயிர் உரங்கள் 
அனைத்திலும்

இரண்டுமடங்கு


ஒரு மடங்கு


ஒரு மடங்கு


ஒருகைப்பிடியளவு


ஒரு ஸ்பூன்




                     மண் கலவை தயார் செய்து ஏழு நாட்கள் கழித்து, தம்பட்டை அவரையின் விதைகளை பஞ்சகாவியம், அல்லது டிரைகோடெர்மா விரிடி அல்லது சூடோமோனஸ் இவற்றில் ஏதாவது ஒன்றில் விதைநேர்த்தி செய்து, அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைகளை, நேரடியாக வளர்ப்பு பைகளில் விதைக்க ஆரம்பிக்கலாம். தம்பட்டை அவரை விதைக்கும் போது குறைந்தபட்சம் ஒரு அடியாவது இடைவெளி விட்டு விதைப்பது நல்லது ஏனென்றால் தம்பட்டை அவரை நன்கு படர்ந்து, விரிந்து வளரக் கூடிய தாவரம் ஆகும். கொடி தம்பட்டை என்றால் கண்டிப்பாக பந்தல் அமைத்து வளர்ப்பது நல்லது.


தம்பட்டை அவரை பராமரிப்பு:


          விதைகள் விதைத்து குறைந்தபட்சம் ஏழிலிருந்து 12-நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும். தம்பட்டை அவரையின் விதைகள் பெரியதாக இருப்பதனால் முளைப்பதற்கு கொஞ்சம் நாட்கள் எடுத்துக்கொள்ளும். செடிகள் நன்கு வளர்ந்து தோராயமா நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து நாட்களுக்குள், பூக்கள் வர ஆரம்பிக்கும். இது அந்தந்த மண்வளத்தை பொறுத்து மாறுபடலாம். பூக்கள் அழகிய வெண்மை கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். நாற்பது நாட்களுக்கு முன்னரே, மண்புழு உரம் அல்லது மணிச் சத்து நிறைந்த ஏதாவது ஒரு உரத்தை வேர்ப்பகுதியில் கொடுக்கலாம். பூக்கள் பூக்கும் தருணத்தில் பூக்கள் உதிராமல் இருப்பதற்கு தேமோர் கரைசல் அல்லது மீன் அமிலம் இவற்றில் ஏதாவது ஒன்றை வாரம் ஒருமுறை தெளித்தால் பூக்கள் உதிர்வு பிரச்சினை சரியாகும்.

பூச்சிகள் கட்டுப்பாடு:


     தம்பட்டை அவரையை பொருத்த வரையில், பெரியதாக பூச்சித்தாக்குதல் ஒன்றும் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அஸ்வினி பூச்சிகளின் தொல்லை கொஞ்சம் இருக்கும். அடுத்தது மழைக்காலங்களில் கம்பளி பூச்சிகளின் தொல்லையும் இருக்கும். இவைகளை சரிசெய்வதற்கு பூச்சிகள் வந்தாலும், வராவிட்டாலும் வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் இரண்டு மில்லி லிட்டர் எடுத்துக் கொண்டு, கூடவே காதி சோப்பு கரைசல் 0.5 மில்லி லிட்டர் சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து விடலாம். கம்பளிப்பூச்சி தொல்லைக்கு விளக்குப் பொறி வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து இழுத்து கட்டுப்படுத்தலாம்.


Sudagarkrishnanchannels
Sword beans Health Benefits 


நோய்த் தாக்குதல்:


       தம்பட்டை அவரையில் பெரிதாக நோய் தாக்குதல்  ஒன்றும் வருவதில்லை. அப்படியே வந்தாலும் வைரஸ் நோய் தாக்குதல் வர ஆரம்பிக்கும். இதை சரி செய்ய சரியான மண் கலவை, சரியான விதைகள், சரியான காலநிலை, விதைநேர்த்தி இதை செய்தாலே போதுமானது. வைரஸ் நோய் பாதிப்பிற்கு, புளிச்ச மோர் கரைசலை தெளித்து விட்டால் வைரஸ் நோயை கட்டுப்படுத்தலாம். அதிகமாக பாதிக்கப்பட்ட வைரஸ் நோய் செடிகளை பிடுங்கி அகற்றி தீயிலிட்டுக் கொளுத்துவது நல்லது.


தம்பட்டை அவரையை எப்படி சமைத்து சாப்பிடலாம்?


          தம்பட்டை அவரை பிஞ்சாக இருக்கும் போதே, பறித்து பொரியல் செய்து சாப்பிடலாம். காரக்குழம்பு, சாம்பார், வற்றல் குழம்பிற்கும் கூட மற்ற காய்கறிகளை போல பயன்படுத்தலாம். முற்றிய பிறகு விதைகளை, வேக வைத்தோ, அல்லது முளைகட்டியோ, சாம்பார் குருமா போன்றவைகளில் சேர்த்து சாப்பிடலாம். தம்பட்டை அவரை பிஞ்சாக இருக்கும் போதே, பறித்து பொரியல் செய்து சாப்பிடும்போது அசைவ உணவுக்கு இணையான ஒரு சுவையை கொடுக்கக்கூடியது. கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.


தம்பட்டை அவரையின் பயன்கள்:


 புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக தம்பட்டை அவரை உள்ளது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் மற்றும் தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சிறிய தாதுக்கள் {minor minerals}உள்ளிட்ட முக்கிய தாதுக்களும் இதில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் இந்த பருப்பில் அதிக அளவில் உள்ளன. முற்றிய தம்பட்டை விதைகள், பதப்படுத்தப்பட்ட வடிவத்தில் அதிக கனிம உள்ளடக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசிய தாதுக்களின் இருப்பு வாள் பீன்ஸை ஊட்டச்சத்து முக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பொருளாக மாற்றுகிறது.

     இந்த காய்கறியில் குளுட்டமைன், லியூசின், அர்ஜினைன், ஃபைனிலாலனைன், லைசின், ஐசோலூசின் மற்றும் வாலின் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இது பால்மிடிக் அமிலம், ஒலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும்.

It is also a good source of fatty acids like Palmitic acid, oleic acid and linoleic acid. 

 இந்த சத்துக்கள் தவிர, வாள் பீனில் ஆல்கலாய்டு, டானின், சபோனின், ஆக்சலேட் மற்றும் பைட்டேட் போன்ற சில எதிர்ப்புச் சத்துக்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
         அவரையில் நமக்கு தேவையான Folate எனும் விட்டமின் சத்து 44 சதவீதம் உள்ளது. இந்த சத்து தான் நமது மரபணுக்களின் உற்பத்திக்கும் செல்களின் வளர்ச்சிக்கும் அமினோ அமிலங்களின் தயாரிப்புக்கும் உதவுகிறது. கருவில் வளர்கின்ற குழந்தைகளுக்கும், ஊட்டச்சத்தினை தருவதற்கு இந்த சத்து அவசியம் என்பதனை மருத்துவர்கள் அடிக்கடி அறிவுறுத்துவார்கள். கரு உருவாவதற்கு முன்பு, கருவுற்ற தாய்மார்கள் அவரை பிஞ்சினை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை கால் மரத்துப் போதல், போன்ற பிரச்சினைகள் எல்லாமே கட்டுப்படுத்தப்படும்.
சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளை இந்த அவரை குறைக்கும். இரவில் உணவில் சேர்த்துக்கொண்டு உறங்கினால் நல்ல உறக்கம் வரும் .
தம்பட்டை அவரையில் நார்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாகிறது. மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சிறுநீரை பெருக்கும் சளி இருமலைப் போக்கும்.

தம்பட்டை அவரை டீ: {Sword bean Tea}


    தம்பட்டை அவரையின் முற்றிய விதைகளை நன்றாக காயவைத்து வறுத்து அரைத்து, தயாரிக்கப்படும் டீ தூளை பயன்படுத்தி , சாதரணமாக நாம் தினமும் வீட்டில் தயாரிக்கும் டீ யை போல தயாரித்து, பயன்படுத்தலாம். இதனை தினமுமே எடுத்துக்கொள்ளலாம். வறுத்த விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்வார்ட் பீன் டீ, சத்தான மற்றும் ஆரோக்கிய நன்மை தரும் பானமாக கருதப்படுகிறது. இந்த தம்பட்டை அவரை டீயால் உடல் பல்வேறு நன்மைகளை பெறுகிறது.


        வாள் பீன் விதை, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் விழிப்புணர்வையும் வலிமையையும் மேம்படுத்த, உணவுப் பொருளாக உண்ணப்படுகிறது. இந்த விதைகளில் இருந்து பெறப்படும் சாறுகள் மூளையில் உள்ள டோபமைன், எபிநெஃப்ரின், நோர்பைன்ப்ரைன் மற்றும் செரோடோனின் {dopamine, epinephrine, norepinephrine, and serotonin } போன்ற இரசாயனங்களின் அளவை பராமரிக்க உதவுவதன் மூலம் நரம்பு மண்டலத்தை தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரசாயனங்கள் கவனத்தையும், செறிவையும் மேம்படுத்த ஒன்றாகச் செயல்படுவதோடு, அதிக ஆற்றலையும் உங்களுக்கு வழங்குகிறது.

These chemicals work together to improve your focus and concentration and also provides you with increased energy.


ஸ்வாட் பீன் இரத்தத்தில் யூரியாவின் அளவை கண்டறிய கொரியன் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தபட்டது. ஆஸ்துமா, தலைவலி, இருமல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, லும்பாகோ, உடல் பருமன், கால்-கை வலிப்பு, ஸ்கிசோஃப்ரினியா,, முகப்பரு மற்றும் அழற்சி நோய்கள் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த பீனை பயனுள்ளதாக ஜப்பானிய மருத்துவம் கருதுகிறது.

பல வளர்ச்சியடையாத நாடுகள்,, விலை மலிவான, பயிரிட எளிமையான, அதிக விளைச்சலை தரக்கூடிய,  அதிகம் புரதம் நிறைந்த உணவான தம்பட்டை அவரை போன்ற ஊட்டசத்து காய்கறிகள், பருப்புகளை,  மக்களுக்கு வழங்கின. ஊதியம் குறைவான ஏழை எளிய மக்களும் ஆரோக்கியமாக, வலிமையாக வாழ பெருமளவு உதவியதாக கூறப்படுகிறது. மேலை நாடுகளின் சுரண்டலூம் படையெடுப்புகள் அடிமை தனங்களினாலூம் இத்தகைய அற்புத, ஊட்டசத்துக்கள் கொண்ட காய்கறிகள், மறைக்கப்பட்டு, மக்களிடையே மறக்கப்பட்டு, சத்தற்ற இராசயன சாயம் பூசிய காய்கறிகள் வலிய திணிக்கப்பெற்று ஆதிக்கம் பெற்றன. என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பயணக் குறிப்பில் குறிபிட்டுள்ளனர்.


                 நம்முடைய பாட்டனும் பூட்டனும் நூறாண்டுகாலம் வாழ்ந்தது இத்தகைய காய்கறிகள் உண்டு இயற்கை வழியில் வாழ்ந்தது தான்!! அவர்களின் வழிதோன்றல்களான நாமும் மறந்துபோகாமல் மீட்டெடுப்போம் அழிவின் பாதையில் அழிந்து கொண்டிருக்கும் இத்தகைய அரிய காய்கறிகளை........




நன்றி!!
 அன்புடன்!!
இயற்கை விவசாயி!!
திரு.சுதாகர்கிருஷ்ணன்.



தம்பட்டை அவரை வளர்ப்பு, பயன்கள் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ள இந்த காணொளியை காணுங்கள்.!!





-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 



Seed sharing competition ended on 12-11-2021 at 12 midnight. Thanks to everyone who participated.

விதைகள் பகிரும் போட்டி 12-11-2021 தேதி நள்ளிரவு 12-மணியோடு முடிவடைந்துவிட்டது. பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி.


Post a Comment

8 Comments

  1. Thank you so much for your great efforts towards the environment

    ReplyDelete
  2. Hello sir
    i am a beginner, i need vegetables seeds, like normal okra, red okra, star okra, sponge gourd, ridge gourd, drumsticks, brinjals,
    i am a beginner, i cant grow sword beans etc, which you showed in todays video,
    we dont eat them as well, i am from telangana,
    in the last give away, i dint got selected, so you told me to remember my name for upcoming give away,
    i have shared you my address by whatsapp, by given number,
    you are doing wonderfull job sir, by dpreding seeds and greenary,
    god bless you and your family
    regards
    Megha B

    ReplyDelete
  3. Sir, Nalla irukingala!!! Saptingala!!!. you have a revolution in agriculture. Your intention is really great. Iam hats off to your great effort of seeds propogation.

    ReplyDelete
  4. Thankyou for your wonderful service

    ReplyDelete
  5. விதைகள் கிடைக்குமா நண்பரே..

    ReplyDelete
  6. I need all 3 varieties of seeds ,sure will give you back.feeling happy I al so participate in this and do something useful.thank you.it is encouraging us,I am new to madi thottam.shall do definitely sudakar sir.you are great inspiration. Please send poonaikali seed also.last time I did not get.

    ReplyDelete
  7. Sir I am interested in growing vegetables as I have now many flowers plants would like to have siragu avarai and other seeds kindly give me to make more.

    ReplyDelete