Translate

Ragi Health Benefits Tamil

 கேழ்வரகின் பயன்கள்


Sudagarkrishnanchannels
Ragi Health Benefits 


 Finger Millet, கேழ்வரகு, ELEUSINE CORACANA, குரக்கன் {இலங்கை வழக்கு} ஆரியம்.


தாய்பாலுக்கு அடுத்தபடியாக மிகவும் ஊட்டசத்துள்ள உணவாக கேழ்வரகு உள்ளது. தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இயற்கை அளித்திருக்கும் கொடையாக கேழ்வரகு பால் பயன்படுத்தப்படுகிறது. சிறியர்வர்கள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவருக்குமே எளிதில் ஜீரணிக்க கூடிய எளிமையான, அதே நேரத்தில் ஊட்டசத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கொண்டுள்ளது கேப்பை, ராகி என அழைக்கப்படும் "கேழ்வரகு ".....

முன்பெல்லாம் கேப்பை களியும், கூழும்  இல்லாத வீடுகளையோ, அம்மன் கோயில் திருவிழாக்களையோ, பார்ப்பது அரிதான ஒன்று. உணவாக மட்டுமில்லாமல் நமது கலாச்சாரத்துடன் நீண்டகால தொடர்பு உடையது கேழ்வரகு.


கேழ்வரகு தோன்றிய வரலாறு:


  த்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர், ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே கேழ்வரகு கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. 

  • கேழ்வரகு முதலில் இந்தியாவில் தோன்றி பின்னர் அரேபியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்று அடைந்து விட்டதாக டிகாண்டில் {1886} கூறுகிறார். அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இந்த பயிர் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், இந்த இடமே முதல் நிலைத் தோற்ற இடமாக, இருக்கக் கூடும் என்று எழுதிவைத்துள்ளார்.
  • வாவிலோவ் 1951 - கேழ்வரகு அபிசீனியாவில் {எத்தியோபியா} தோன்றியிருக்கும் என்று கூறுகிறார்.
  • ஆனால் மெஹ்ரா 1963 தன்னுடைய பயணக் குறிப்புகளில்,  கேழ்வரகு  முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் சோபியன் வழியாக இந்தியாவை சென்றடைந்து இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 
கேழ்வரகு வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

 லகின் பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் இருக்கும் கேழ்வரகு இந்தியாவில் கர்நாடகா, தெலுங்கானா ஆந்திரா, தமிழ்நாடு, பீகார் மற்றும்  இமாச்சல பிரதேச மலைபகுதிகளில் பிரதான பயிராக பயிரிடப்படுகிறது.


கேழ்வரகு பயிரிடும் முறை 


  • கேழ்வரகு பயிரை ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். 
  • வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பயிராக இருப்பதால் மலைச்சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வெற்றிகரமாக பயிரிட்டு சிறந்த அறுவடையை எடுக்க முடியும்.
  • கடின வகை பயிர் என்பதால், மானாவாரி மற்றும் தமிழ்நாட்டின் பாசனப் பயிர் என இரு முறையிலும் பயிர் செய்யலாம்.
  • கேழ்வரகு பயிருக்கு அதிக மழை நல்லதல்ல. கதிர் முதிரும்போது, மழை இருக்கக்கூடாது. எனவே நல்ல வடிகால் வசதியுடைய, போதுமான அளவு நீர் தேக்க தன்மையுடைய, வண்டல் மண் கேழ்வரகு சாகுபடிக்கு ஏற்றது. 
  • சிறிதளவு நீர் தேக்கத்தினை தாங்கும் தன்மை பெறுவதற்கு, போதுமான அளவு வடிகால் வசதியுடைய களிமண்ணில் கேழ்வரகு சாகுபடி செய்யலாம்.

கேழ்வரகின் பயன்கள்:


கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
 கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான தாதுக்களும் கரோட்டின், தயமின்  ரிபோபிளேவின் போன்ற சிறிய ஊட்டசத்துக்களும் உள்ளது. அனைவருக்கும் பொருந்தக்கூடிய சிறந்த ஆரோக்கியமான உணவாகும். கேழ்வரகில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது. மேலும் நிறைவுறா கொழுப்பு என்று கூறப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. எனவே,. செரிமானத்திற்கு ஏற்ற சிறந்த தானியமாகும்.
அரிசி கோதுமை உள்ளிட்ட, பல தானியங்களை விட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம். பாலைக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உள்ளது.


எலும்புகளை உறுதிப்படுத்துகிறது:

 கேழ்வரகில் சுண்ணாம்பு மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் உதவுகிறது. எனவே விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், தொடர்ந்து கேழ்வரகினை உணவில் சேர்த்து வந்தால், அவர்களின் செயல்திறன் மேலும் மேலும் அதிகரிக்கும்.

உடல்எடையை குறைக்க உதவுகிறது:

டல் எடையை வேகமாக குறைக்க, பலரும் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, மருத்துவ சிகிச்சை முறைகள் என பல வழிகளில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கேழ்வரகு உணவுகள் சிறந்த பயனை கொடுக்கும். அதிகம் செலவு இல்லாதது. 
 கேழ்வரகில் அதிக அளவில் உள்ள நார்ச்சத்தானது  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தடுத்து,  உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே உடல் எடையை சுலபமாக குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்து வரலாம். அதன்பிறகு உடல் எடை குறையும் அதிசயத்தை ஒரு மாதத்தில் நீங்கள் உணரமுடியும்.

புரதச்சத்து நிறைந்தது:


 கேழ்வரகில் மற்ற தானியங்களை விட அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் மற்றும் சதை வளர்ச்சி சீராக அமையும். எனவே வளரும் எனவே வளரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு உணவுகளை தொடர்ந்து கொடுத்து வந்தால், உடல் எடையும் அதற்கேற்ற சரியான உயரமும், வயதிற்கு ஏற்ற சரியான வளர்ச்சியும் குழந்தைகளுக்கு ஏற்படும். ஆற்றலும் அறிவு கூர்மையும் ஏற்படும்.

ரத்தசோகை நோயை கட்டுப்படுத்துகிறது:


 கேழ்வரகில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் அதிகம் உள்ளதால் அவர்களுக்கு இரும்புச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்களும், குழந்தை பெற்ற தாய்மார்களும், வயதான பெண்களும் கேழ்வரகு உணவினை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ரத்தசோகை உடல்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை கேழ்வரகு கட்டுபடுத்துகிறது.


மலச்சிக்கலை போக்குகிறது:

 லச்சிக்கலுக்கு முக்கியக் காரணம் நார்ச் சத்து குறைவான உணவுகளை உட்கொள்வதே ஆகும். தினமும் கேழ்வரகு உணவினை சிறிதளவு சேர்த்து உண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படாது. ஏன் என்றால் இதிலுள்ள நார்ச்சத்து  மலச்சிக்கல் பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடல் ஆரோக்கியத்தையும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளையும், வயிற்றுப்பொருமல் வயிற்றுக் கோளாறுகளை குணமாக்க உதவுகிறது.


உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது:

 டினமான உடல் உழைப்பு உள்ளவர்கள் கேழ்வரகை எடுத்துக்கொண்டால் தங்கள் வேலைகளில் மேலும் சிறந்து விளங்க வேண்டிய சக்தியினை கேழ்வரகு அளிக்கிறது. இதனால் தான் கல் உடைப்பவர்கள், விவசாய வேலை செய்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் போன்ற கடுமையான வேலைகளில் ஈடுபடுபவர்கள், கிராமங்களில் இன்றளவும் கூட கேழ்வரகு களி, கூழ் இவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.


சர்க்கரை நோயினைக் கட்டுபடுத்துகிறது:

  ரத்த சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள், தினமும் கேழ்வரகு உணவில் சேர்த்து வந்தால் அவர்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். இதனால் தான் மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு, கேழ்வரகு ஒரு வரப்பிரசாதம் என கூறுகிறார்கள். எனவே அரிசி, கோதுமை உணவுகளை மட்டும் உண்ணாமல், உங்கள் உணவு பட்டியலில் சிறுதானியம் சேர்த்து வாருங்கள் உறவுகளே!!.. சிறுதானியங்கள் உங்கள் உடலுக்கு பல வித நன்மைகளை செய்ய வல்லது.


Sudagarkrishnanchannels
Ragi Health Benefits 


தைராய்டு நோயாளிகளுக்கு உகந்தது:

மீபத்தில் தான் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார், சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய மருத்துவ முறைகளும் டயட்டும் சொல்லப்படுகிறது. ஆனால் எங்களை போல தைராய்டு பாதிப்பு உள்ளவராகளுக்கு என்று, ஒரு தகவலும் யாரும் தருவதில்லை நீங்களாவது தைராய்டு பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடக்கூடிய உணவு பழக்கவழக்கங்களை பற்றி பதிவு எழுதுங்கள் என கேட்டிருந்தார்கள். நிச்சயமாக விரைவில் பதிவிடுகிறேன்.

 தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த தானியம் கேழ்வரகு ஆகும். குறிப்பாக ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது கேழ்வரகு உணவுகளைதான். கேழ்வரகு தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் 100mg, 250mg அளவில் மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு கூட மிகவும் குறைந்து தைராய்டு கட்டுக்குள் இருக்கும்.


இளமை தோற்றதிற்கு:

  கேழ்வரகு உணவுகள், சருமத்தை பாதுகாத்து வயதான தோற்றத்தை குறைத்து, என்றும் இளமையோடு வாழ உதவுகிறது. இதில் உள்ள மெத்தியோனைன் மற்றும் லைசின் சருமச்செல்களை எப்பொழுதும் புத்துணர்ச்சியாக வைக்கிறது. விட்டமின் டி யும் இருப்பதால் மேலும் பலன் தருகிறது.


குழந்தைகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த உணவு :

  •  பழங்காலம் தொட்டே கேழ்வரகை முளைக்கட்டி சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும் வழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது. இன்றும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. 
  • பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக கொடுக்கலாம். கேழ்வரகை ஊறவைத்து அரைத்து வடிகட்டி, தயாரிக்கப்படும் கேழ்வரகு பால் - குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்களை பெறமுடியும். 
  • குழந்தைக்கு ஒரு வயது தொடும்போது கேழ் வரகை ஊறவைத்து, முளைகட்டி பின் உலர்த்தி, பொடி செய்து அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுத்தால், சரியான எடையில் குழந்தை போஷாக்காக வளரும். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. 
  • அரிசியைவிட அதிக சத்துக்களை கொண்டுள்ள கேழ்வரகை குழந்தைகளுக்கு கொடுப்பதால்  நீண்ட நேரம் பசி அடங்கும். கேழ்வரகில் உள்ள டிரிப்டோபான் எனப்படும் பொருள், பசி அதிகம் ஏற்படுவதை அடக்கி, உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு வலு சேர்க்கிறது. இதனால் சிறு குழந்தைகள் அதிக எடை அதிகரிப்பதை கட்டுபடுத்துகிறது. சிறுவயதில் பூப்படைவதையும் தடுக்கிறது..  
  • குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல உடல் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ணவேண்டும். கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதால், அவர்களின் உடல் பலம் பெறும்; நோய் எதிர்ப்பு சக்தி அவர்கள் உடலில் அதிகரிக்கும்.

உடலுக்கு ஓய்வு:

 னப் பதட்டம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற மனரீதியான பிரச்சனைகளை சந்திப்பவர்கள், கேழ்வரகு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கலாம். கேழ்வரகில், ஆன்டி ஆக்சிடென்ட்கள் முக்கியமாக டிரிப்டோபான் மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதால், அவை இயற்கையான வகையில் ஓய்வு நிலையை தருகிறது. 2000 ஆண்டில் MIDINDIA நடத்திய ஆய்வின்படி, கேழ்வரகு நுகர்வு, ஒற்றைத் தலைவலிக்கு பயனுள்ளதாக இருக்கின்றது என கண்டறிந்தனர். எனவே நீங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால், குறைந்தபட்சம் கேழ்வரகு பிஸ்கட் சாப்பிடலாம்.



கேழ்வரகில் உள்ள ஊட்டசத்துக்கள்

100 கிராம் தானியத்தில்


சத்துக்கள்

அளவு

புரதம்(கி) 7.3
கொழுப்பு (கி) 1.3
பொட்டாசியம் (கி) 2.6
நார்சத்து (கி)
3.6
கார்போஹைட்ரேட் (கி) 72.0
ஆற்றல் கிலோ (கலோரி) 328
கால்சியம் 344
இரும்புசத்து ( மி.கி) 3.9
தயாமின் (மி.கி) 0.42
ரிபோபிளேவின்( மி.கி) 0.19
நியாசின் (மி.கி) 1.2




கேழ்வரகு உணவு வகைகள் 



இட்லி, தோசை, இடியாப்பம் என நெல் அரிசியில் செய்யும் அத்தனை உணவு வகைகளையும் சிறுதானியங்களிலும் செய்ய முடியும். 

கேழ்வரகை யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?


 கேழ்வரகு மிகவும் சத்துக்கள் அடங்கிய உணவாக இருந்தாலும், சிறுநீரக பாதிப்புகள், அடைப்பு உள்ளவர்கள் மட்டும் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. கேழ்வரகை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் அதிகளவில் உற்பத்தியாகும்.


 

          நெல் விளைவிக்க தேவையான தண்ணீரோ உரமோ பூச்சிக்கொல்லியோ கேழ்வரகு விளைவிக்க தேவையில்லை. இதனை விளைவிப்பதால் விவசாயிகளுக்கு நன்மை தான் கிடைக்கிறது. உரமும் பூச்சிக் கொல்லியும் இல்லாததால் உருக் குலையாத முழுமையான ஊட்டச்சத்துள்ள கேழ்வரகு உணவை பெற முடிகிறது.   இது தான், கேழ்வரகின் சிறப்பே.

 கேழ்வரகிற்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் வளர்ந்து, விதைகள் சிறித்து குறைந்துபோகும்; அதனாலேயே, உர நிறுவனங்களின் "தந்திரங்கள் எல்லாம்" கேழ்வரகில் அதிகம் பலிக்கவில்லை. 

 கேழ்வரகை எந்தக் கடையில் வாங்கினாலும், கிட்டத்தட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியமாக, நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம். 

சிறு தானியங்கள் அனைத்தும் அளவில் சிறியதாக இருப்பதால் அதன் மேல் தோலை நீக்குவதோ, அரிசியைப் போல பாலிஷ் செய்வதோ, இயலாத காரியம். எனவே சிறுதானியங்களின்  ஊட்டச்சத்துக்கள், முழுமையாக நமக்கு கிடைக்கின்றன. இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம். 

பண்டைய தமிழகத்தில், அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களே, தினமும் உண்ணும் உணவாக இருந்து வந்துள்ளது. இன்று நாம் தினமும் உண்டு வரும் அரிசி வகை உணவுகள் பண்டைய காலத்தில் பண்டிகை நேரத்தில் மட்டுமே, தமிழர்கள் உண்டு வந்துள்ளனர். ஆகவே அரிசியைக் காட்டிலும் சிறுதானியங்களின் சத்துக்கள் அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு, இனி அடிக்கடி உணவில் சிறுதானியம் சேர்த்து ஆரோக்கியம் பெற வேண்டும்.






நன்றி!!
அன்புடன்,
இயற்கைவிவசாயி
திரு.சுதாகர்கிருஷ்ணன்.



🙏

Post a Comment

0 Comments